Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப விழா 3ம் நாள்: 1008 ... மொரட்டாண்டி கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜை மொரட்டாண்டி கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி

பதிவு செய்த நாள்

12 நவ
2021
03:11

திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 9ம் தேதி மாலையில் கடற்கரை நுழைவு பகுதியில் நடந்தது. 7ம் திருநாளான நேற்று முன்தினம், இரவு யில் உள் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்த 2 நாட்களும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த 2 நாட்களிலும் கோயில் வளாகம் மற்றும் நகரப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்த 2 நாட்களிலும் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்னர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar