திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2021 03:11
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது . விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 9ம் தேதி மாலையில் கடற்கரை நுழைவு பகுதியில் நடந்தது. 7ம் திருநாளான நேற்று முன்தினம், இரவு யில் உள் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்த 2 நாட்களும் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, அந்த 2 நாட்களிலும் கோயில் வளாகம் மற்றும் நகரப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்த 2 நாட்களிலும் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று முதல் பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்னர்.