Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் தீப ... அனக்கரை அணையில் 10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு அனக்கரை அணையில் 10,008 தீபங்கள் ஏற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாயக்கர்களின் வீர வரலாறு நடுகல் மூலம் வெளிப்பாடு
எழுத்தின் அளவு:
நாயக்கர்களின் வீர வரலாறு நடுகல் மூலம் வெளிப்பாடு

பதிவு செய்த நாள்

22 நவ
2021
03:11

பல்லடம்: பல்லடம் அருகே, கேத்தனூர் பகுதியில் உள்ள நடுகல் ஒன்று, நாயக்கர்களின் வீர வரலாற்றை பறைசாற்றி வருகிறது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கேத்தனூர் - காமநாயக்கன்பாளையம் செல்லும் ரோட்டில், நடுகல் ஒன்று முட்புதர்களுக்கு மத்தியில் கேட்பாரற்று உள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் மூலம், இந்த நடுகல்லின் சிறப்பு தற்போது வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து வரலாற்று ஆர்வலர் பாண்டியன் கூறியதாவது: கேத்தனூரில் உள்ள நடுகல்லானது வீரக்கல் என்று கூறப்படுகிறது. 17ம் நூற்றாண்டு வகையை சேர்ந்த இக்கல், கம்பள நாயக்கர்களின் வீர வரலாற்றை பறைசாற்றுகின்றது. இதை மாலக்கோவில் என்றும் வழிபாடு செய்கின்றனர். இது நம் முன்னோர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதில், கால்நடையுடன் வீரர்கள், வீரப்பெண்மணிகள் உள்ளிட்ட சிற்பங்கள் என, கம்பள நாயக்கர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. இன்றும், இப்பகுதியை சேர்ந்த சிலர் இந்த நடுகல்லை வழிபட்டு, விளக்கேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நடுகல் குறித்தும், நம் முன்னோர்களின் வழிபாட்டு முறைகளையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். இதனுடன் இருந்து மண் பொம்மைகள் சேதம் அடைந்து விட்டன. புதர்களுக்கு மத்தியில் நடுகல் மூடிக்கிடப்பது கவலை அளிக்கிறது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் பாலாலயம் நடத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar