Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமகிருஷ்ண சேவா சங்கத்தில் துறவிகள் ... திருவாடானை கோயில்களில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருடேஸ்வரா கோவிலின் சிவன் விக்ரஹம் தலை துண்டிக்கப்பட்டுள்ள படம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2021
03:11

உத்தர கன்னடா : உத்தர கன்னடாவின் பட்கல்லில் அரபி கடற்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருடேஸ்வரா கோவிலின் சிவன் விக்ரஹம் தலை துண்டிக்கப்பட்டுள்ள படம் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதால் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம், பட்கல்லில் அரபி கடற்கரையில் முருடேஸ்வரா சிவன் கோவில் அமைந்துள்ளது. சிவன் அமர்ந்த நிலையிலும், முகப்பு வாயிலில் பிரமாண்டமான கோபுரமும் அமைந்துள்ளது. கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கோவா, கேரளா, மஹாராஷ்டிரா, ஆந்திரா என நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்

.இந்நிலையில், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா வனப்பகுதியில் அடிக்கடி மர்ம நபர்கள் சாட்டிலைட் போன்கள் பயன்படுத்துவது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.தேசிய புலனாய்வு படையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தி வாய்ஸ் ஆப் ஹிந்த் என்ற பத்திரிகையில் முருடேஸ்வரா கோவில் இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சிவன் விக்ரஹத்தின் தலை துண்டிக்கப்பட்டு, கைகள் சேதப்படுத்தப்பட்ட படம் இடம் பெற்றுள்ளது. இப்படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதை கவனித்த உத்தர கன்னடா மாவட்ட நிர்வாகம், கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு போட்டுள்ளது. ஒரு வேளை கோவிலுக்கு பாதிப்பு ஏற்படுத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனரா என்ற அச்சம் எழுந்துள்ளது.தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் நாயக் நேற்று கோவிலுக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.அவர் கூறுகையில், இது குறித்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவிடம் பேசியுள்ளேன். கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar