சபரிமலையில் கங்கை தீர்த்தம், பக்தர் படத்துடன் போஸ்ட் ஸ்டாம்ப்: தபால் துறை ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03டிச 2021 02:12
கங்கைதீர்த்தம், பக்தர் படத்துடன் ஸ்டாம்ப் சபரிமலையில் தபால் துறை ஏற்பாடு
சபரிமலை: சபரிமலை மற்றும் பம்பை போஸ்ட் ஆபீசுகளில் கங்கை தீர்த்தம் விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்கள் படத்துடன் ஸ்டாம்ப் அச்சடித்து பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷிகேஷ் மற்றும் கங்கோத்ரியில் இருந்து சேகரிக்கப்பட்ட புனித நீர் பம்பை மற்றும் சன்னிதானம் போஸ்ட் ஆபீசில் விற்கப்படுகிது. கிருஷிகேஷில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீர் 500 மில்லி 22 ரூபாய். 200 மில்லி 14 ரூபாய். கங்கோத்ரியில் இருந்து சேகரிக்கப்பட்ட புனிநீர் 500 மில்லி 35, 250 மில்லி 30, 200 மில்லி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த போஸ்ட் ஆபீசுகளில் ‘மைஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ் பக்தர்கள் தங்கள் படம் பதித்த ஸ்டாம்புகள் பெற்றுக்கொள்ளலாம். 300 ரூபாய் செலுத்தினால் மைசூர் அரண்னை பேக்ரவுண்டில் தங்கள் படம் பதித்த 12 ஸ்டாம்புகள் கிடைக்கும். இந்த ஸ்டாம்புகளை பக்தர்கள் சாதாரண கடிதம் அனுப்ப பயன்படுத்த முடியும். சன்னிதானம் போஸ்ட் ஆபீசில் அனைத்து அலைபேசிகளுக்கும் ரீசார்ஜ், டாப் அப் செய்ய முடியும். சபரிமலையில் இருந்து அனுப்பப்படும் கடிதம் மற்றும் வரும் கடிதங்களில் குத்தப்படும் முத்திரையில் சபரிமலையின் 18 படிகள் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் வேறு எந்த போஸ்ட் ஆபீசிலும் இதுபோன்ற சிறப்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் இகாணிக்கை செலுத்த வசதியாக சன்னிதான சுற்றுப்பறங்களில் வைக்கப்பட்டுள்ள கியூ.ஆர். கோடு போர்டுகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 9495999919 என்ற எண் மூலம் கூகுள்பே மூலம் காணிக்கை செலுத்தலாம்.