Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெகநாதபெருமாள் கோவிலில் பிபின் ... மதுரை சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி: ஆகம ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பம் மதுரை சைவ அர்ச்சகர்களுக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
17ம் நூற்றாண்டு நடுகல் தலைவலி தீர வழிபடும் மக்கள்
எழுத்தின் அளவு:
17ம் நூற்றாண்டு நடுகல் தலைவலி தீர வழிபடும் மக்கள்

பதிவு செய்த நாள்

11 டிச
2021
05:12

பல்லடம்: பல்லடம் அருகே, 17ம் நூற்றாண்டின் நடப்பட்ட நடுகல்லை, தலைவலி தீர்வதற்காக கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தில், சோமனூர் - அய்யன்கோவில் செல்லும் ரோட்டில், நடுகல் ஒன்று உள்ளது. தலைவலிக்கு தீர்வு கிடைக்க இந்த நடுகல்லை வழிபட்டு வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட வரலாற்று ஆர்வலர் பாண்டியன் கூறுகையில், திருவாசி அமைப்புடன் உள்ள இச்சிலை தெய்வ வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட நடுகல் ஆகும். வலது கையில் வாளும், இடது கையில் கட்டாரியும் இருப்பதால், இது ஒரு பெரு வீரரின் சிலை என்பதை உணர்த்துகிறது. பரந்த மார்பும், அகன்ற தோளும் சிலை மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காதில் தொங்கட்டான்களும், கைகளில் வளையல்கள், மார்பில் அணிகலன்கள் இருப்பதை நோக்கினால் இவரது செல்வநிலை புலப்படுகிறது. இவர் இப்பகுதியில் குறுநில தலைவராக இருந்து இருக்கலாம். வலது புறம் பெரிய கொண்டையுடன் கூடிய தலை அலங்காரம் இருப்பதால், 16 - 17ம் நூற்றாண்டு நாயக்கர் ஆட்சிக்காலத்தை தவறாக இருக்க வாய்ப்பு உள்ளது. வலது கையில் வாலுக்கு மேல்பகுதியில் கிளி காட்டப்பட்டுள்ளது. வீரரின் இருபுறமும் வாழை மரங்கள் குலையுடன் காட்சி தருகின்றன. தென்னை ஓலையின் கீற்றுகளில் அலங்கார தொங்கல்கள் போலவும், வாழைக்குலை அருகே காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இவரை பாட்டையயப்பன் என்ற பெயரில் கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்‌‌ என்றார்.‌  கிராம மக்கள் கூறுகையில், பாட்டையப்பன் என்ற பெயருடன் முன்னோர்கள் வழியில் வழிபட்டு வருகிறோம். ஒற்றைத் தலைவலி, மற்றும் தீராத தலைவலி உள்ளவர்கள் இங்கு வழிபட்டு சென்றால் குணமடைவதாக நம்பிக்கை உள்ளது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar