Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம் மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் சூரை விழா மேலநத்தம் அருந்தவசு அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆறு மாதங்களில் ரூ.1,600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு
எழுத்தின் அளவு:
ஆறு மாதங்களில் ரூ.1,600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு

பதிவு செய்த நாள்

14 டிச
2021
11:12

சோளிங்கர் : தமிழகத்தில் ஆறு மாதங்களில், 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன, என, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவிலில் ரோப்கார் அமையும் இடத்தில், 11 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள, பல்வேறு திட்டப் பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது. பணிகளை துவக்கி வைத்து, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: தமிழகத்தில் வரும் ஏழு மாதங்களுக்குள், 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆறு மாதங்களில், 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற 47 கோவில்களுக்கு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கோவில்களுக்கு பஸ் வசதி, கழிவறை, மடப்பள்ளி, ரோப்கார் மற்றும் மலைப் பாதையில் உள்ள கோவில்களுக்கு மருத்துவமனை வசதிகள் ஏற்படுத்தப்படும்.திருச்செந்துார் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், 300 கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். சோளிங்கர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு, 53 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சோளிங்கர், லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஆறு மாதங்களுக்குள், ரோப்கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை கபாலீஸ்வரர் கலைக் கல்லுாரியில் இந்தாண்டு, 240 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar