Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வா வா நடராஜா கோஷத்தோடு சிதம்பரம் ... ஸ்ரீரங்கம் ராப்பத்து 6ம் நாள்: சௌரி ராஜ முடியில் நம்பெருமாள் அருள்பாலிப்பு ஸ்ரீரங்கம் ராப்பத்து 6ம் நாள்: சௌரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ரா தரிசன விழா: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டது
எழுத்தின் அளவு:
ஆருத்ரா தரிசன விழா: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டது

பதிவு செய்த நாள்

19 டிச
2021
07:12

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை மங்களநாதர் சிவன் கோயிலில் இன்று காலை மரகத நடராஜருக்கு சந்தனம் களைதல் நடைபெற்றது. நாளை (டிச., 20) அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மங்களநாத சுவாமி கோயிலில் டிச.,11ல் காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நாளை (டிச.,20) வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8:00 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனபடி களைதல் நடைபெற்றது. அதன்பின் பக்தர்களுக்கு சந்தனம் பிரசாதம் வழங்கப்பட்டது. 9:00 மணிக்கு மரகத நடராஜருக்குமகா அபிேஷகம் நடைபெற்றது.

இரவு 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் கல்தேர் மண்டபத்தில் எழுருந்தருளுகிறார். இரவு 11:00 மணிக்கு நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிேஷகம் தொடங்குகிறது. நாளை அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர்பெருமாள் வீதியுலா, மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு அபிேஷகம், வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.

உள்ளூர் விடுமுறை: ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, நாளை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய 2022 ஜன.,8 சனிக் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். வெளிமாவட்ட, மாநிலங்களிலிருந்து மக்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இலவச, கட்டண தரிசன வழிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar