Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ராப்பத்து 6ம் நாள்: சௌரி ... பழநி திருவாதிரை உற்சவம்: பொண்ணூஞ்சலில் அம்மன் பழநி திருவாதிரை உற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2022ம் ஆண்டுக்கான முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2022ம் ஆண்டுக்கான முன்பதிவு துவக்கம்

பதிவு செய்த நாள்

19 டிச
2021
07:12

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2022ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேகம், பூஜைகளுக்கான முன்பதிவு துவங்கியது.

நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் ஒரே கல்லால், 18 அடி உயரத்தில் வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் தினமும் காலையில் நடை திறக்கப்பட்டு, ஆஞ்சநேயருக்கு, 1,008 வடை மாலை சாற்றப்படும். நல்லெண்ணெய், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். மதியம், 1:00 மணிக்கு அலங்காரம் செய்யப்படும். தினசரி பூஜைக்காக, நாடு முழுவதும் உள்ள பக்தர்கள், முன்கூட்டியே தங்களுக்கு விருப்பமான தேதியில், கட்டளைதாரர்களாக முன்பதிவு செய்து, அபி  ேஷகத்தில் பங்கேற்பர். அதன்படி, 2022ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேகம், , சிறப்பு பூஜைகளுக்கான முன்பதிவு இன்று துவங்கியது. நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்தனர்.

இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது: 2022ம் ஆண்டுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. தற்போது ஒரு நாள் அபிஷேகத்துக்கு, ஐந்து கட்டளைதாரர்கள் வீதம் பதிவு செய்யப்படுகிறது. ஒருவருக்கு தலா, 6,000 வீதம், ஒரு நாள் வடைமாலை மற்றும் அபிஷேகத்துக்கு, ஐந்து பேரிடம் மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பக்தர்கள் தொகையை செலுத்தி, முன்பதிவு செய்து ரசீது பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

சுவாமி அலங்கார கட்டணம்: ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்ய, 3,000 ரூபாய், தங்க கவசம், 5,000, தங்கத்தேர் இழுத்தல், 2,000, வெள்ளி கவசம், 750, நாமகிரி தாயார் தங்க கவசம், 750, நரசிம்மர் திருக்கல்யாணம், 2,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு மதுரை வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் இறங்கிய ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவில் இன்று வீர அழகர் வெள்ளை குதிரை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில் சித்திரை சப்தஸ்தான திருவிழா ஐயாறப்பர் கண்ணாடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar