Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி மஹா சுவாமிகள் 28வது ஆராதனை விழா குறுக்குத்துறை முருகன் கோயிலில் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி குறுக்குத்துறை முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது: மாக்காப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
அனுமன் ஜெயந்தி விழா துவங்கியது: மாக்காப்பு அலங்காரத்தில் சுவாமி

பதிவு செய்த நாள்

31 டிச
2021
11:12

துாத்துக்குடி: துாத்துக்குடி பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. நேற்று சுவாமி ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு, மாக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

துாத்துக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா நேற்று துவங்கியது. ஜன. 2ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது. நேற்று காலை 5:00 மணிக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து மார்கழி மாத பூஜை, 9:00 மணிக்கு மேல் மங்கள இசை, திருமஞ்சனம், திருவாராதனம் நடந்தது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக தீபாராதனைகள் நடந்தது. மாலையில் முரளிதர சுவாமிகள் பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மாக்காப்பு அலங்காரத்தில், சுவாமி ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகளை, தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன் செய்தார். இரண்டாம் நாளான இன்று வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும், மூன்றாம் நாளான நாளை ஜன. 1ம் தேதி சந்தனகாப்பு அலங்காரத்திலும் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஜன. 2ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது. காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம், திருவாராதனம், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு புஷ்பாஞ்சலி, ஸ்ரீராமர் ஆராதனம், திருப்பாவாடை, தளிகை பிரசாத வினியோகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar