Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் ... தஞ்சை பெரிய கோவிலில் புத்தாண்டு வழிபாடு: பெருவுடையாருக்கு பஞ்சமுக தீபாரதனை தஞ்சை பெரிய கோவிலில் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரோப்கார், வின்ச், தரிசன முன்னுரிமையை தவிர்க்கவும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
12:01

பழநி: பழநி மலைக்கோயில் செல்ல ரோப்கார் வின்ச் தரிசன முன்னுரிமை கோருவதைத் தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

பழநி மலைக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள், பாதயாத்திரையாக முருக பக்தர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் வருகை புரிகின்றனர். மலைக்கோயில் செல்ல படிப்பதை வின்ச், ரோப் கார் வசதிகள் உள்ளன. இவற்றில் ரோப்கார், வின்சில் செல்லவும்,சுவாமி தரிசனத்திற்கும் சிலர் கோயில் நிர்வாகத்தினரிடம் முன்னுரிமை கோரி வருகின்றனர். எனவே பக்தர்களின் நலன் கருதி வின்ச், ரோப் கார் மற்றும் தரிசனத்திற்கும் முன்னுரிமை கோருவதை தவிர்த்து உரிய வரிசை முறைகளைப் பின்பற்றி, பிறருக்கு இடையூறு இன்றி மலைக்கோயிலில் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் ஆங்கில புத்தாண்டான இன்று வரும் பக்தர்கள் அமைதியுடனும் விரைவாகவும் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல், மற்றும் சமூக விலகலை கடைபிடிக்கவேண்டும். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாலையின் இடது ஓரமாகவும், குழுக்களாகவும் வரவேண்டும். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சமிக்கை ஏற்படுத்தும் ஒளிரும் பட்டை, டார்ச்லைட் பயன்படுத்தி கவனமாக பாத யாத்திரை மேற்கொள்ளுமாறு கோயில் இணை ஆணையர் நடராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் ஐப்பசி மாத கார்த்திகையை ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவாரூர்; 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜமாதங்கி அம்மன் திருக்கோவிலில் நெய்க்குள தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar