Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறுங்குடி நம்பி கோயிலில் ... சுவாமி நம்மாழ்வார் திருஅத்யயன உற்சவம் துவக்கம் சுவாமி நம்மாழ்வார் திருஅத்யயன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி பெரிய கோவில் கும்பாபிஷேகம்! மாநில வல்லுநர்குழு அனுமதி
எழுத்தின் அளவு:
அவிநாசி பெரிய கோவில் கும்பாபிஷேகம்! மாநில வல்லுநர்குழு அனுமதி

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
03:01

அவிநாசி: பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடத்த, மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது; இதையடுத்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலம், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.

சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த, 1980ல், கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பின், 1991, மற்றும், 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது. ஹிந்து ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, விரைவில் கும்பாபிஷேகம். நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் இருந்தது. திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில், கட்டுமான பணிகள் சேதமடைந்து வருகின்றன என்ற புகாரும் இருந்தது. தொடர்ச்சியாக, கடந்தாண்டு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு செய்து, திருப்பணி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்தனர். நிறை, குறை மற்றும் தேவைகளை கேட்டறிந்தனர். இக்கோவில், 100க்கும் மேல் பழமை வாய்ந்ததாக இருப்பதால், கும்பாபிஷேகம் நடத்த, ஐகோர்ட் நியமித்த மாநில அளவிலான திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி பெற வேண்டியிருந்தது. தற்போது அக்குழு, கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டி கூறுகையில், “கோவில் குட முழுக்கு செய்ய திருப்பணி வல்லுநர் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. திருப்பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திட்ட அறிக்கை தயாரானவுடன், உபயதாரர்கள் மட்டடத்திலான ஆலோசனை நடத்தப்பட்டு, முடிவெடுக்கப்படும். " என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar