Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ... மகாகணபதி கோயிலில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருட்டு முயற்சி
எழுத்தின் அளவு:
சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருட்டு முயற்சி

பதிவு செய்த நாள்

06 ஜன
2022
03:01

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் சி.சி.டி.வி., கேமிராக்களை உடைத்து விட்டு இரண்டு மர்ம நபர்கள் திருடுவதற்கு முயற்சி செய்தனர். இவர்களை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் மலை மீது பிரசித்தி பெற்ற ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அர்ச்சகர் பூஜைகளை முடிந்து நடைசாற்றினார். இரவு 9 மணியளவில் இரண்டு மர்ம நபர்கள் கோவிலின் மீது பாதுகாப்பு அமைத்திருந்த இரும்பு வேலியை உடைத்து விட்டு, கருவரை முன்புள்ள தாழ்வாரத்தில் இறங்கி உள்ளனர்.

அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை உடைத்து விட்டு திருட்டு முயற்சியில் இறங்கி உள்ளனர். தாயார் சன்னதி, மூலவர் சன்னதியின் இருப்பு கேட்டை உடைத்துள்ளனர். மூலவர் சன்னதியின் மரக்கதவை உடைக்க முடியாமல் அருகில் இருந்த வரதராஜர் சன்னதியின் இரும்பு பூட்டை உடத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்து இரவு காவலர்கள் ரமேஷ், தேவா ஆகியோர் கிராம மக்களை உதவிக்கு அழைத்து கூச்சல் போட்டபடி மலை மீது ஏறி சென்றனர். காவலர்கள் வருவதை கண்ட திருடர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து கோவில் ஊழியர் இளங்கீர்த்தி செஞ்சி போலீசில் புகார் செய்தார். விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா திருட்டு முயற்சி நடந்த ரங்கநாதர் கோவிலை பார்வையிட்டார். செஞ்சி டி.எஸ்.பி., இளங்கோவன், இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். திருட்டு நடந்த இடத்தில் பதிவான கைரோகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகருக்கு இன்று இரு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar