போடி: திருமலாபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிசேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி அளவில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் விவேக்கை பாராட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.