செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் தீர்த்தம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் மஹா கணபதி ஹோமம், அனுக்கை, விக்னேஷ்வர, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து நேற்று பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு இருந்த தீர்த்தக் குடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டன.
பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடந்தன.
விழாவில் அ.தி.மு.க., மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சவரிமுத்து உள்ளிட்ட சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.