Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கும்பாபிஷேக யாகசாலை ... வடபழனி ஆண்டவர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக அஷ்டபந்தனம் தயாரிப்பு வடபழனி ஆண்டவர் கோயிலில் ...
முதல் பக்கம் » வடபழனி கும்பாபிஷேகம் » செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் இரண்டாம் கால பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் இரண்டாம் கால பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2022
09:01

சென்னை: வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை 9:௦௦ மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கியது.

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜை கோலாகலமாக துவங்கியது. சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 23ம் தேதி, கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு உள்ளது. பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், அர்ச்சகர்கள் யாகத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 7:௦௦ மணிக்கு யாகசாலை பிரவேசம் துவங்கியது. தொடர்ந்து, கடஸ்த்தாபனம், முதற்கால யாகபூஜை, ஜபம், ஹோமம் நடத்தப்பட்டு, இரவு 9:௦௦ மணிக்கு மஹா பூர்ணாஹுதி தீபாராதனையுடன் நிறைவு பெற்றது.

பின், அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவேரி, கிருஷ்ணா, கோதவரி, தாமிரபரணி உள்ளிட்ட நதிகளில் இருந்து, தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மேலும், ராமேஸ்வரம் தீர்த்தக் கிணறு, அறுபடை முருகன் திருத்தலங்கள் என, பதினைந்து இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. ஆறுபடை வீடுகளில் இருந்தும் கொண்டு வரப்பட்ட தீர்த்தமானது, நேற்று காலை வேங்கீஸ்வரர் கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின் வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. இன்று காலை 9:௦௦ மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கி 12:௦௦ மணிக்கு மகா பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறுகிறது. பின், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை துவங்கி, இரவு 8:30 மணிக்கு பூர்ணாஹுதியுடன் நிறைவு பெறும். இதே போல், சனிக்கிழமை நடைபெறும் யாகசாலை பூஜைகளுக்கு பின், ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெறும்.

 
மேலும் வடபழனி கும்பாபிஷேகம் செய்திகள் »
temple news
சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை அடுத்து, தொடர்ந்து 48 நாட்கள் ... மேலும்
 
temple news
சென்னை: வட பழநி ஆண்டவரை தரிசிக்க இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை வடபழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகல்யாண வைபவம் நடந்தது.வடபழநி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ... மேலும்
 
temple news
சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar