பதிவு செய்த நாள்
21
ஜன
2022
06:01
சென்னை: சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அஷ்டபந்தனம் தயாரிப்பு நிகழ்வு நடைபெற்றது.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம், வரும் 23ம் தேதி, கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இறைவனுடைய மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்யும்போது அவை அசையாமல் நிலை நிறுத்துவது அவசியமாகும். அதற்கான மருந்துதான் அஷ்டபந்தனம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் ஆகிய எட்டு பொருள்களை கொண்டு, அஷ்டபந்தன மருந்து தயாரிக்கப்படுகிறது. வடபழனி ஆண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு கோயிலில் அஷ்டபந்தனம் தயாரிப்பு நிகழ்வு நடைபெற்றது. வேதவிற்பன்னர்கள் கலந்துகொண்டு அஷ்டபந்தன மருந்து தயார் செய்தனர். நிகழ்ச்சியை ராஜா மற்றும், பிச்சை குருக்கள் துவக்கி வைத்தனர்.