Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பக்தர்கள் கூட்டம் வல்லடிகாரர் கோயிலில் அண்ணாமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2022
10:03

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, கடந்த 16 ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தோடங்கியது. 20 ந் தேதி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, மாலை மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல் இரவு 10 மணிக்கு வெள்ளை யானையில் அம்மன் புறப்படுதல், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றது. நாளை 22 ந் தேதி செவ்வாய்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்குதல, நிகழ்ச்சியும், நடக்கிறது.

வசதிகள் : கோவிலுக்கு திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், கோபி மற்றும் பெருமாநல்லூரை சுற்றி உள்ள கிராம பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. தீ யணைப்பு துறை, மருத்துவ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி :30 இடங்களில் மொபைல் டாய்லெட், 7 இடங்களில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக கானப்படுவதால், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் கானும் வகையில் இரண்டு இடங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு :அவிநாசி டி.எஸ்.பி. தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. போலீசார், ஆயிதபடை, ஊர்காவல்படையினர், என 800 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

பஸ் வசதி : கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல திருப்பூர், அவிநாசி, குன்னத்தூர், நம்பியூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோவில் ஐப்பசி பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar