பழநியில் பங்குனி கார்த்திகை: தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2022 08:04
பழநி: பழநியில் பங்குனி மாத கார்த்திகை நட்சத்திர நாளான நேற்று தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பழநி மலைக்கோயிலில் பங்குனி மாத கார்த்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. தங்கமயில் வாகனத்தில் சின்னகுமாரசுவாமி புறப்பாடு நடைபெற்றது. அதன்பின் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் தங்கரதபுறப்பாட்டில் கலந்து கொண்டனர். உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.