சோழவந்தான்: வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை மீனாட்சி சுந்தரேசஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா மார்ச் 31 கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று(ஏப்.,13) திருக்கல்யாண சீர்வரிசை, மாலைமாற்று உற்சவம் நடக்கிறது. நாளை(ஏப்.,14) காலை 10:30 முதல் 10:59 மணிக்குள் சுவாமி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். இதேபோல் திருவாலவாயநல்லுரர் மந்தை கருப்புசாமி கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. சோழவந்தான், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் நாளை காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.