Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தமிழ்ப் புத்தாண்டு, பிரதோஷம் ... சிங்கம்புணரி பத்ரகாளியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தமபாளையம், சின்னமனூரில் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
உத்தமபாளையம், சின்னமனூரில் திருக்கல்யாணம் : ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

14 ஏப்
2022
07:04

உத்தமபாளையம்: சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர், சிவகாமியம்மனுக்கும், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் நேற்று காலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில சித்திரை திருவிழா ஏப், 7 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமியும், அம்மனும் வீதி உலா வந்தனர். நேற்று காலை 10. 29 மணிக்கு பூலாநந்தீஸ்வரருக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. மஞ்சள் பட்டில் அம்மனும், வெண்பட்டில் சுவாமியும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். சிவாச்சாரியார் பாலன் திருமாங்கல்யத்தை சூட்டினார். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ஒம் நமச்சிவாயா முழக்கம் விண்ணைத் தொட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று ( ஏப்.15) மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு இங்கு எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. அம்மன் இளஞ்சிவப்பு பட்டுப் புடவையிலும், சுவாமி வெண்பட்டிலும் இருந்தனர். சிவாச்சாரியார்கள் திருமாங்கல்யத்தை சூட்டினார்கள். திருக்கல்யாணம் முடிந்தவுடன் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை காளாத்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்,

கம்பம் : கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலையில் சுருளி அருவியில் திரளான பொதுமக்கள் குளித்தனர். பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள பூத நாராயணர் கோவில். ஆதி அண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் அன்னதானம் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar