திருப்புத்துார்: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவமும், சுபகிருது பஞ்சாங்கம் வாசிப்பும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திருவனந்தால் பூஜைக்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மூலவர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினர். காலை 10:50 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.