Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோளிங்கர் மலை கோவிலில் ரோப் கார் ... தமிழ் புத்தாண்டு தீர்த்தவாரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடகாவில் கோவில் திருவிழா குரான் ஓதி துவங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2022
06:04

 பெங்களூரு-கர்நாடகாவில், பாரம்பரிய முறைப்படி குரான் ஓதி, கோவில் தேர்த் திருவிழா துவங்கியது, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இருந்தது.

சர்ச்சைகர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளி, கல்லுாரிகளில், ஹிஜாப் எனப்படும், தலை மற்றும் முகத்தை மூடும் துணி அணிய, இஸ்லாமிய மாணவியருக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.இதே போல, திருவிழாக்களின்போது, கோவிலுக்கு அருகில் கடைகள் வைக்க, முஸ்லிம்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.இந்நிலையில், இங்கு, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில், கோவிலில் தேர்த் திருவிழா ஒன்று நடந்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் உள்ள, 12ம் நுாற்றாண்டை சேர்ந்த சென்னகேசவா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பெருமாள் கோவிலான இங்கு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்கவில்லை.புனித நுால்இந்நிலையில், நேற்று முன்தினம் தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

வழக்கமாக தேர் புறப்படுவதற்கு முன், இஸ்லாமியர்களின் புனித நுாலான குரானில் இருந்து சில வாசகங்கள் ஓதப்படுவது வழக்கம். அதன்படி, தேர் புறப்படுவதற்கு முன், ஹிந்து மக்கள் புடைசூழ, இஸ்லாமிய மத குருவான காஜி சையது சஜீத் பாஷா என்பவர், குரானில் இருந்த வாசகங்களை ஓதினார். மேலும், இதன் ஒரு நிகழ்வாக, கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தர்காவுக்கு கரகமும் எடுத்துச் செல்லப்பட்டது

.இதற்கு, சில ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நடைமுறைகள், ஹிந்து மதத்திற்கு எதிரானவை என்றும்; இவற்றை இனி பின்பற்றக்கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர். எனினும், கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் அவற்றை பொருட்படுத்தாமல், பாரம்பரிய முறைப்படி, அனைத்து சடங்குகளையும் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar