Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அட்சய லிங்க சுவாமி கோவில் ... தமிழகத்தில் இரண்டு சூரியன்கள்: தருமபுரம் ஆதீனம் தமிழகத்தில் இரண்டு சூரியன்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஏராளமானோர் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஏராளமானோர் வடம் பிடித்தனர்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2022
03:04

உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 5ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. 6ம் தேதி மாலை 4 மணிக்கு பந்தலடியில் தாலி கட்டுதல் நிகழ்ச்சியுடன் தினசரி இரவு சுவாமி வீதிஉலா நடந்தது. நேற்று திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பூசாரி கைகளால் தாலி கட்டிக் கொண்டு புத்தாடைகளை உடுத்தி கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று காலை 8 மணியளவில் அரவாண் சிரசுக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கீரிமேடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஜம், மார்பு, நத்தம் கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கை, கால்களை 21 அடி உயர தேரில் பொருத்தினர். சிவிலியன்குளம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தேரினை கொண்டு தயார் செய்தனர். பின்னர் 15 அடி மற்றும் 20 அடி உயரம் மாலையை தேரில் சாற்றி பூக்களால் அலங்கரித்தனர். பின்னர் 8.30 மணியளவில் தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. இதில் திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லரைக் காசுகளையும் சுவாமி மீது வீசி வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து கற்பூரம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர். தேர் தொட்டி, நத்தம் வழியாக பந்தலடி சென்றடைந்தது. அங்கு திருநங்கைகள் பந்தலடியில் அழுகளம் நிகழ்ச்சியில் தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்தனர். சிலர் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தினர். பின் அப்பகுதியில் உள்ள கிணற்றில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்ப தொடங்கினர். அப்பகுதியில் அதிகளவில் கடைகள் வைக்கப்பட்டிருந்ததால் தங்களுக்கு வேண்டிய பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
திருமலை; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா மே 06 முதல் 08 வரை ... மேலும்
 
temple news
தேனி;வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத்தேர் உத்ஸவம் விருப்பன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar