Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமரபுயங்கரீஸ்வரர் கோவிலில் நடராஜர் ... மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் 16 வகை திரவியங்கள் மணக்க நடராஜருக்கு மகா அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிவாலயங்களில் 16 வகை திரவியங்கள் மணக்க நடராஜருக்கு மகா அபிஷேகம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2022
11:04

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சிவாலயங்களில், சித்திரை மாத திருவோண தினமான நேற்று, ஸ்ரீநடராஜர் - சிவகாமியம்மனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாலயங்களில், மூலவர் லிங்க வடிவில் அருள்பாலித்தாலும், சிவகாமியம்மனுடன் ஸ்ரீநடராஜர், திருச்சபைகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர். ஆண்டுக்கு, ஆறு நாட்கள் மட்டும், மகா அபிஷேகம் நடக்கிறது. சித்திரையில் -திருவோணம், ஆனி - உத்திரம், மார்கழி -திருவாதிரை ஆகிய நட்சத்திரங்கள்; ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசி திதி என, ஆறு அபிஷேகம் மட்டுமே நடக்கிறது.

சுபகிருது ஆண்டு, சித்திரை மாத திருவோண நட்சத்திர நாளான நேற்று, சிவாலயங்களில் மகா அபிஷேகம் சிறப்பாக நடந்தது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கே.செட்டிபாளையம் அண்ணாமலையார் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஊத்துக்குளி ரோடு காசி விஸ்வநாதர் கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும், நேற்று, ஸ்ரீநடராஜர் மகா அபிஷேகம் நடந்தது.


திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீநடராஜர் -சிவகாமியம்மனுக்கு, கனகசபை மகா மண்டபத்தில், பால், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, தேன், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகை திரவியங்களால், அபிஷேகம் நடந்தது.சிவாச்சார்யார்கள், ஓதுவா மூர்த்திகள், சிவனடியார்களின், பன்னிரு திருமுறைகள் பாராயணத்துடன், மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. உலக நன்மை வேண்டியும், கொரோனா பிடியில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டியும், சிவாச்சார்யார்கள் பூஜை மேற்கொண்டனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar