Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூத்தாண்டவர் கோவில் திருவிழா புகழி மலையில் ஆடி சஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசிவிசுவநாதர் அம்மன் சன்னதி முன் வாயில் திறக்கப்பட வேண்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2012
11:07

தென்காசி: தென்காசி காசிவிசுவநாதர் கோயில் அம்மன் சன்னதி முன் வாயில் திறக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசியில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட உலகம்மன் காசிவிசுவநாதர் கோயில் பழைமையும், பெருமையும் வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். மாதந்தோறும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் காசிவிசுவநாதர், பாலமுருகன், உலகம்மன் சன்னதிகளும், பரிவார தெய்வங்களுக்கு சிறிய அளவிலான தனி சன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். குற்றாலம் சீசன் காலத்திலும், ஐயப்ப சீசன் காலத்திலும் காசிவிசுவநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். காசிவிசுவநாதர் கோயிலுக்கு சொந்தமான பல கடைகள் தனி நபர்களிடம் சிக்கி வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. ராஜகோபுரம் வாயில் வழியே பக்தர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வருகின்றனர். பக்தர்கள் கோயிலில் தரிசனம் முடிந்ததும் வெளியே செல்வதற்கு அம்மன் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள வாயிலை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அம்மன் சன்னதி முன் வாயில் மூடப்பட்டுள்ளது. இந்த வாயிலை திறந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை மவுனம் சாதித்தே வருகிறது. இதனால் அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதி பாழடைந்து வருவதால் இப்பகுதியின் உறுதிதன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியை பக்தர்களின் வசதிக்காக திறக்கவும், அப்பகுதியை முறையாக பராமரிக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டசபை மனுக்கள் குழுவினர் இன்று (26ம் தேதி) குற்றாலம் வந்து ஆய்வு கூட்டம் நடத்துகின்றனர். தென்காசி காசிவிசுவநாதர் கோயில் பிரச்னையையும் ஒரு கோரிக்கை மனுவாக நினைத்து சட்டசபை மனுக்கள் குழு பரிசீலனை செய்து உலகம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar