Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: இருப்பதைக் ... திருமலையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசன நேரம் குறைப்பு! திருமலையில் முதியோர், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் மரியாதையுடன் அவ்வை அடக்கம்: கண்ணீர் சிந்திய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2012
10:07

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் கோயில் யானை அவ்வை பக்தர்கள் கண்ணீர் சிந்த, கோயில் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை "அவ்வை, 53, நேற்று முன்தினம் மாரடைப்பால் இறந்தது. இரவு முழுவதும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு, யானைக்கு திரவிய அபிஷேகங்கள் செய்தனர். பரிவட்டம் கட்டப்பட்டு, கோயில் மரியாதை செய்யப்பட்டது. காலை 6 மணிக்கு, உடல் லாரியில் ஏற்றப்பட்டது. ரத, கிரிவீதிகளில் இறுதி ஊர்வலம் சென்றது. அங்கு திரண்ட பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தென்பரங்குன்றம் பசு மடத்தில் "அவ்வை யின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கோயில் சார்பில் தீபம் ஏற்றப்படட்டது. காலை 9 மணிக்கு, கோயிலுக்குள் 3 வெள்ளிக்குடங்களில் புனித நீர் நிரப்பி யாக பூஜைகள் நடந்தன. பின், நேற்றுமுன்தினம் மாலை, இரவு, நேற்று காலை வழக்கமான பூஜைகள் நடந்தன. மூலவர்கள் சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, முருகப்பெருமான் கரத்திலுள்ள வேலுக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. கோயில் மண்டபங்களில் புனித நீர் தெளிக்கப்பட்ட பின், நடை திறக்கப்பட்டது.

துளிகள்: * 41 ஆண்டுகள் கோயில் பணியாற்றிய அவ்வை மவுத் ஹார்ன் வாசிப்பதில் தமிழக அளவில் புகழ் பெற்றது. * அவ்வை இறந்ததால், திருப்பரங்குன்றத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. * உடல் அடக்கம் நடந்த இடத்தில், போலீசாரிடம், "அவ்வையை கடைசியா பார்த்துக்கிறோம் என, சிறுவர்கள் முதல் முதியோர் வரை கெஞ்சியதால், அவர்களை போலீசார் அனுமதித்தனர். * அடக்கம் முடிந்த பின், பெண்கள் பால் ஊற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar