Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலுார் கோயில் கும்பாபிஷேகம் நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

13 மே
2022
01:05

ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடந்தது.

துாத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் 108 வைணவ திவ்யதேசங்களில் சிறப்புபெற்ற நவதிருப்பதி திருக்கோயில்களில் ஒன்பதாவது ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி பொலிந்துநின்றபிரான் திருவீதி உலா வருதல் நடந்தது. 5 ஆம் திருவிழாவில் சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி க்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது. இதற்காக அதிகாலை சுவாமி பொலிந்துநின்ற பிரான் திருத்தேரில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோவிந்தா
கோபாலா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் ரத வீதி வழியாக மீண்டும் கோயில் முன் வந்தடைந்தது. சித்திரை தேரோட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் இளைஞர் பிராமணர் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் அஜீத், உபயதாரர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar