Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யாதகிரிகுட்டா நரசிம்ம கோயிலில் ... கொடைக்கானலில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய அழகர் கொடைக்கானலில் பச்சை பட்டு உடுத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2 ஆண்டுகளுக்குப் பின் திருக்கோஷ்டியூர் சித்திரைத் தேர் : திரளாக பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
2 ஆண்டுகளுக்குப் பின் திருக்கோஷ்டியூர் சித்திரைத் தேர் : திரளாக பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

15 மே
2022
07:05

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்த சித்திரைத் தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மே 5ல் கொடியேற்றி பிரமோத்ஸவம் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த உத்ஸவத்தில் தினசரி வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா இரவில் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:15 மணிக்கு தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நடந்தது. இரவில் அன்னவாகனத்தில் திருவீதி உலா நடந்தது நேற்று காலை 8:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்ருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து, வலம் வந்து வழிப்பட்டனர். மாலை 5:00 மணிக்கு பட்டமங்கலம், மல்லாக்கோட்டை நாட்டார்கள் வருகைக்குப் பின்னர் தேரில் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்டம் நடைபெறவில்லை. நேற்று தேரோடும் போது மழை பெய்தும் கிராமத்தினர் உற்சாக திரளாக பங்கேற்று தேர் வடம் பிடித்துச் சென்றனர். இன்று 11ம் திருநாளை முன்னிட்டு காலை பிரணயகலகம், மாலை பஷ்பயாகம் வாசித்தல், சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளல், நடைபெறும். நாளை 12ம் திருநாளை முன்னிட்டு இரவில் புஷ்பப்பல்லக்கு நடைபெற்று பிரமோத்ஸவம் நிறைவடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar