Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரசிம்ம ஜெயந்தி: நரசிம்ம சுவாமிக்கு ... பட்டின பிரவேசத்தில் எதற்கு வீண் வம்பு? பட்டின பிரவேசத்தில் எதற்கு வீண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹரே ராமா கோஷம் முழங்க திருப்புல்லாணியில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
ஹரே ராமா கோஷம் முழங்க திருப்புல்லாணியில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 மே
2022
02:05

திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் ஹரே ராமா கோஷம் முழங்க பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு தனி சன்னதி கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மே 7 அன்று சைத்ரோத்ஸவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை, மாலை நேரங்களில் விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம், பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பட்டாபிஷேக ராமர் உள் மற்றும் வெளிப்பிரகார வீதியுலா வந்தார். இன்று காலை 10 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட 51 அடி உயரம் கொண்ட பெரிய தேரில் சீதா பிராட்டியார் சமேத ராமபிரான், லஷ்மணர் உற்ஸவ மூர்த்திகளாய் வீற்றிருந்தனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து "ஹரே ராமா" கோஷம் முழங்க நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர். பகல் 1:00 மணி அளவில் தேர் இருப்பு நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் மீது கனிகள் வீசப்பட்டு, தீர்த்தம் தெளிக்கப்பட்டது. உற்ஸவ மூர்த்திகளுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. நாளை காலை 9 மணி அளவில் ஆதி ஜெகநாத பெருமாள் கருட வாகனத்திலும், பட்டாபிஷேக ராமர் அனுமன் வாகனத்திலும் சேதுக்கரை கடற்கரையில் எழுந்தருளுகின்றனர். பின்னர் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவில் சந்திர பிரபை வாகனத்தில் ராமர் எழுந்தருளுகிறார். வருகிற மே 18 இல் உற்ஸவ சாந்தியுடன் பூஜை நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar