Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ... வடவெட்டி ஆதிலிங்கேசுவரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூனையை குழியில் மூடி மாடுகளை இழுத்து வழிபாடு : 5 மணி நேரத்துக்கு பின் உயிருடன் ஓடியதால் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மே
2022
04:05

பவானிசாகர்: பூனையை உயிருடன் மணலால் மூடி, பொலி காளையை இழுத்து வழிபடும் வினோத விழா, பவானிசாகர் அருகே நடந்தது.  பவானிசாகரை அடுத்த கோடேபாளையம், கொல்லாப்பூர் மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு  கம்பம் விழா, கடந்த, 13ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு பொலி காளை இழுத்தல் நிகழ்ச்சி, கோவில் மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. மாடுகள் நலம் பெற, விவசாயம் செழிக்க, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னதாக மூங்கில் குச்சியை ஏந்திபடி, கோவில் முன் இளைஞர்கள் திரண்டனர். மேள தாளத்துடன் சென்று ஊர் பெரியவரை மாலை அணிவித்து அழைத்து வந்தனர். அதை தொடர்ந்து கோவில் முன் கம்பம் நடப்பட்ட இடத்தில், குழி தோண்டினர். அதில் பூனைக்குட்டியை உயிருடன் வைத்து, சிறப்பு பூஜை செய்து, மணல் நிரப்பி மூடினர். பூனைக்குட்டியை மூடிய இடத்தில், அலங்கரிக்கப்பட்ட காளைகளை நிற்க வைத்து, சிறப்பு பூஜை செய்தனர். காளைகளை படுக்க வைத்து அந்த இடத்தை மூன்று முறை சுற்றி இழுத்தனர். இந்த வினோத விழாவைக் காண, ஆயிரக்கணக்கான மக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். குழியில் வைத்து மூடப்பட்ட பூனைக்குட்டியை, 5 மணி நேரத்துக்குப் பின் மீட்டபோது, உயிருடன் ஓடியது. இதனால் ஊர் செழிப்பாக இருக்கும். இந்த ஐதீக விழா ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பதாக, ஊர் மக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar