Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கடலூரில் 12 ஜோதிர்லிங்க தரிசனம் வட்டெழுத்து கல்வெட்டு திருப்பூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு: விநாயகருக்கு சிறப்பு ஆராதனை
எழுத்தின் அளவு:
சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு: விநாயகருக்கு சிறப்பு ஆராதனை

பதிவு செய்த நாள்

20 மே
2022
05:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகருக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் மாலை, 5:00 மணிக்கு ேஹாமம், 5:30 மணிக்கு அபிேஷகம், மாலை, 6:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்தனர்.

திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி வலம்புரி விநாயகருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.கொண்டேகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவில், தெப்பக்குளம் ராஜகணபதி கோவில், மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி மாதம் முதல் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம்; 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதே போல் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

உடுமலை: பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியன்று, விரதமிருந்து விநாயக பெருமானை பக்தர்கள் வழிபடுகின்றனர்.உடுமலை சித்தி, புத்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதே போல, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களிலும், விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar