Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக ... காஞ்சி கோவில் சிற்றுண்டியகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் பணியை துவக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2022
04:05

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், நடைபெறாமல் உள்ள ராஜகோபுர திருப்பணியை, உடனடியாக துவக்க வேண்டும் என, பா.ஜ., மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுக்கு, இவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபையில் அறிவித்த, 165 கோவில் திருப்பணிகளில், மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள கோவில்கள் திருப்பணிகள் இடம்பெறவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை அளிக்கிறது. கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுக்கு, எட்டு கோடி ரூபாய் வருமானமும், 50 கோடி ரூபாய் நிதி ஆதாரம் உள்ளது. ஆனால், இக்கோவில் ராஜகோபுர மற்றும் சுற்றுப் பிரகாரம் திருப்பணிகள் சில ஆண்டுகளாக செய்யாமல் முடங்கிக் கிடக்கின்றன. இக்கோவிலில் பல சன்னதிகளுக்கு பூசாரிகளும் இல்லை. பவானி ஆற்றின் கரையோரம் படித்துறை கட்டுவதும் நின்றுள்ளது. பக்தர்கள் கழிப்பிடம் மற்றும் தங்கும் மண்டபம் ஆகியவை கட்டப்படாமல் உள்ளன. நிதி ஆதாரம் உள்ள கோயில் என்பதால், முழுநேர அன்னதானம் வழங்கும் திட்டத்தையும், பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தையும், வழங்க பரிசீலிக்க வேண்டும். கோவில் நிர்வாகம் சீராக நடைபெற, பரம்பரை அறங்காவலருடன், கூடுதல் அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவிலாகும். இதன் உப கோவிலான சந்தான வேணுகோபால் கோவில், திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. இதன் ராஜகோபுரம் பணிகள் மற்றும் கோவில் புனரமைப்பு வேலைகள் ஏதும் செயல்படாமல் உள்ளன. அரங்கநாத கோயிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் கோசாலை அமைக்க வேண்டும். குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோவிலில் திருமண மண்டபம், ராஜகோபுர திருப்பணிகள் உடனடியாக செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாண்டுரங்கன் மனுவில் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar