Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1000ம் ஆண்டு பழமையான கோதீஸ்வர கோவில் ... சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் திருவிழா நாளை துவக்கம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் ஆட்சேபனை தாக்கல் செய்ய உத்தரவு
எழுத்தின் அளவு:
வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் ஆட்சேபனை தாக்கல் செய்ய உத்தரவு

பதிவு செய்த நாள்

25 மே
2022
12:05

வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பாக நடத்தப்பட்ட கள ஆய்வு குறித்த ஆட்சேபனைகளை, ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்ய, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடக்கிறது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உலக புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இதை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார கவுரியை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த வாரணாசி சிவில் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஸ், நேற்று முன்தினம் விசாரணையை துவக்கினார்.சிருங்கார கவுரியை தினமும் வழிபட அனுமதி கோரும் ஹிந்துக்களின் மனுக்களை முதலில் விசாரிப்பதா அல்லது கள ஆய்வு நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கை முதலில் விசாரிப்பதா என்பது குறித்து, நேற்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளாக, நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது, கள ஆய்வு அறிக்கை தொடர்பான விவகாரத்தில், இரு தரப்பும் தங்களுடைய ஆட்சேபனைகளை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar