Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் சாத்தாம்பாடியில் புரவி ... தொடரும் கோவிலில் உண்டியல் திருட்டு : பக்தர்கள் கவலை தொடரும் கோவிலில் உண்டியல் திருட்டு : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் அதிகாலையில் சிறுத்தை நடமாட்டம்
எழுத்தின் அளவு:
மருதமலை கோவிலில் அதிகாலையில் சிறுத்தை நடமாட்டம்

பதிவு செய்த நாள்

28 மே
2022
03:05

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், அதிகாலை நேரத்தில் சிறுத்தை உலாவரும் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி உள்ளது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில், மலை மேல் உள்ளதால், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் என, வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கோவிலுக்கு அருகில், 65 குடும்பங்கள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை, 2:30 மணிக்கு, மலை மேல் உள்ள கோவிலின் இடதுபுறத்தில் உள்ள தேர் நிறுத்துமிடத்தில், சிறுத்தை ஒன்று நடமாடும் சி.சி.டி‌.வி., காட்சிகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,"அதிகாலை, சுமார், 2:30 மணிக்கு, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது, கோவிலுக்கு இடதுபுறம் உள்ள தேர் நிறுத்தும் இடத்தின் அருகில், நாய் ஒன்று, 5 குட்டிகளை ஈன்றுள்ளது. அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அதில் ஒரு குட்டியை தூக்கி சென்றுள்ளது," என்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில்,"மருதமலையில் வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளது. சிறுத்தை வந்து சென்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அச்சிறுத்தையின் நடமாட்டம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar