Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஆடி ... கூட்டு வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேன் கூடுகள் கட்டி தேரோட்டம் கெங்கவல்லி அருகே வினோதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2012
12:08

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, தெடாவூர் கிராமத்தில், ஆடிப்பெருக்கு நாளில், 60 அடி உயர கூத்தாண்டவர் கோவிலில்,  தேன் கூடுகள் கட்டி தேர் இழுக்கும்,சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, தெடாவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன், கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆடிப்பெருக்கு நாளில், தேர்த்திருவிழா நடந்து வருகிறது.இந்த ஆண்டு, ஜூலை 15ம் தேதி, கூத்தாண்டவர் ஸ்வாமிக்கு, வெளி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா துவங்கியது. 31ம் தேதி, அய்யனாருக்கு பொங்கல், மாவிளக்கு பூஜைகள் நடந்தது. நேற்று,  அதிகாலை, 3 மணியளவில், வசிஷ்ட நதியில் இருந்து, கூத்தாண்டவர் ஸ்வாமிக்கு பூஜை செய்து, கண் திறக்கும் நிகழ்ச்சிகள்  நடந்தது. ஆடிப்பெருக்கு நாளில், காலை, 6.30 மணியளவில், தேன் கூடுகளும், பல்வேறு மலர்களிலும், விவசாய நிலத்தில் விளைந்த பாக்கு, கடலை, நெல் போன்ற தானியங்களால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயரம் கொண்ட கூத்தாண்டவர்
தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர். முக்கிய வீதி வழியாக சென்ற தேர், நேற்று மாலை 5 மணியளவில், கோவில் நிலை நிறுத்தப்பட்டது. இவ்விழாவில், ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தெடாவூர், தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதுகுறித்து, தெடாவூர் கிராம மக்கள் கூறியதாவது: கூத்தாண்டவர் ஸ்வாமிக்கு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடத்துவது வழக்கம். தேன் கூடுகளையும், விளை  நிலத்தில் விளைந்த தானியங்களையும் கட்டி வைத்து, சூரிய உதயம் துவங்கியதும் தேர் இழுத்து செல்லப்படுகிறது.
தேரில் கட்டப்படும் தேன் கூட்டில் இருந்து வெளியேறும் தேனீக்கள், தேர் இழுத்து செல்லும் போது, பக்தர்கள் யாரையும்  கடிப்பதில்லை. இந்த தேனீக்களை, கடவுளாக வழிபாடு செய்கிறோம். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
சென்னை; ஆதிமூலப் பெருமாள் கோவிலில் திருப்பணி மேற்கொள்ளவதற்காக பாலாலயம் செய்யப்பட்டது. சென்னை, ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar