Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரஆஞ்சநேய சுவாமி கோயிலில் தீமிதி ... மகாபலி வானாதிராயர் கால எல்லைக்கல் கண்டுபிடிப்பு மகாபலி வானாதிராயர் கால எல்லைக்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடனபாதேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
நடனபாதேஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
09:06

நெல்லிக்குப்பம் : திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ரூ. 43 லட்சம் செலவில் புதிதாக செய்த தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் ராஜராஜசோழன் காலத்துக்கு முன் கட்டப்பட்ட ஹஸ்தாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ராஜராஜசோழன் திருப்பணிகள் செய்ததாக கல்வெட்டுகள் உள்ளது.

இக்கோவிலில் ஆனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் தேர் திருவிழா விமர்சையாக நடைபெறும். அதற்கான தேர் இல்லாததால் தமிழக அரசு புதிய தேர் செய்ய ரூ. 43 லட்சம் நிதி ஒதுக்கி, தேர் கட்டும் பணிகள் நடந்து முடிந்தது.இதையடுத்து 119 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேர் வெள்ளோட்டம் நடந்தது. கலசங்களில் புனித நீர் நிரப்பி யாகம் நடத்தி தேருக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.அமைச்சர் கணேசன், வேல்முருகன் எம்.எல்.ஏ., சேர்மன் ஜெயந்தி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தனர்.

ஆனி மாதம் பிரம்மோற்சவத்தில் தேரோட்டம் நடைபெற உள்ளது.நிகழ்ச்சியில் துணை சேர்மன் கிரிஜா, திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் காசிநாதன் த.வா.க., நகர செயலாளர் கார்த்திக், அறநிலையத்துறை இணை ஆணையர் ஆசோக்குமார், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மகாதேவி, நகராட்சி கமிஷ்னர் பார்த்தசாரதி உட்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகள் வழியே தேர் வெள்ளோட்டம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar