Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடனபாதேஸ்வரர் கோவிலில் புதிய தேர் ... திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் தெப்ப வெள்ளோட்டம் திருப்புத்துார் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாபலி வானாதிராயர் கால எல்லைக்கல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மகாபலி வானாதிராயர் கால எல்லைக்கல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
03:06

மதுரை, மதுரை வடபழஞ்சி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு முந்தைய மகாபலி வானாதிராயர் கால கோயில் எல்லைக்கல் ஒன்றை மதுரை வரலாற்று ஆர்வலர் அறிவுச்செல்வம், கோயில் கட்டடக் கலை, சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கண்டுபிடித்தனர். அவர்கள் கூறியதாவது: வடபழஞ்சி பாண்டி விநாயகர் கோயில் முன் உள்ள கல் குறித்து வரலாற்று ஆர்வலர் ராமகிருஷ்ணன் தந்த தகவலின் பேரில் ஆய்வு செய்தோம். 175 செ.மீ., உயரம், ஒருஅடி நீளம், அகலம் கொண்டசெவ்வக வடிவ கல்லில் 21 வரிகள் தமிழில் வெட்டப்பட்டுள்ளது.


இக்கல்வெட்டு கி.பி., 15ம் நூற்றாண்டை சேர்ந்தது. 500 ஆண்டுகளுக்கு முந்தையது எனகண்டறிந்தோம். இக்கிராமம் மகாபலி வானாதிராயர் காலத்தில் சர்வ மானியமாக கொடுக்கப்பட்டதாக கல்வெட்டு செய்தி சொல்கிறது. இக்கல்லின் மேற்புறம் சூலமும், கீழே வாயில் பாம்பை கவ்விய மயில் உருவமும்செதுக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை முருகன் கோயிலுக்குரியஎல்லைக் கல்லாக கருதலாம். மூத்த தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் இக்கல்வெட்டில் உள்ள செய்தியை வாசித்து உரிய விளக்கம் அளித்து உதவினார், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar