Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரராகவர் கோயில் முன் பேராயருக்கு ... முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மின்னொளியில் மாமல்லபுரம் கலை சிற்பங்கள்: சுற்றுலா பயணியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?
எழுத்தின் அளவு:
மின்னொளியில் மாமல்லபுரம் கலை சிற்பங்கள்: சுற்றுலா பயணியரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2022
06:06

மல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் கலைச் சின்னங்களில், புதிய விளக்குகள் அமைத்தும், சுற்றுலாப் பயணியரை, இரவில் அனுமதிப்பது தாமதமாகிறது. மின்னொளியில் சிற்பங்களை ரசிக்க, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய கலை சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் தொல்லியல் சின்னங்களை, உள்நாடு, சர்வதேச சுற்றுலாப் பயணியர் காண்கின்றனர். இவற்றை, தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது.பயணியர், சிற்பங்களை காண, இத்துறை நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறது. காலை 6:00 மணி - மாலை 6:00 மணி வரை பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த 2019 அக்டோபரில் முறைசாரா மாநாடாக இங்கு சந்தித்தபோது, கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை சிற்ப வளாகங்களில், பாரம்பரிய பகுதி சூழலுக்கேற்ற மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.

பயணியரும், மின்விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் சிற்பங்களை, இரவு 9:00 மணி வரை காண அனுமதிக்கப்பட்டனர்.பிரதமர் நிகழ்விற்காக, அவசர சூழலில் அமைக்கப்பட்ட விளக்குகள், மழை நீர் சூழ்ந்தது உள்ளிட்ட பாதிப்புகளால், நாளடைவில் பழுதடைந்தது. கொரோனா தொற்று காரணமாக, இரவு அனுமதியும் ரத்தானது.தற்போது இரவிலும் அனுமதிக்க கருதி, கடந்த பிப்ரவரியில் மழை நீரால் பாதிக்கப்படாத வகையில், சற்று உயர மேடையில், 110 வாட் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. முதல்முறையாக, உயர்கோபுர மின் விளக்குகள், கடற்கரை கோவில் பகுதியில் ஒன்பது, வெண்ணெய் பாறை பகுதியில் ஒன்று என அமைக்கப்பட்டன.சில மாதங்கள் கடந்த நிலையில், இரவில் பயணியர் அனுமதி தாமதமாகிறது. விருந்தினராக வருவோருக்கு மட்டும், மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படுகின்றன. கோடை விடுமுறையில், பயணியர் குவியும் நிலையில், இரவில் சிற்பங்கள் காண விரும்புகின்றனர். தொல்லியல் துறை, அவர்களின் எதிர்பார்ப்பை பரிசீலிக்க வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar