பேரையூர்: பேரையூர் அருகே எஸ்.அரசபட்டி எஸ். கிருஷ்ணாபுரம், சுந்தரலிங்காபுரம், சேர்வராயன்பட்டி, பி.இராமநாதபுரம், கொண்டுரெட்டிபட்டி ஆகிய 6 ஊர்களில் கடந்த மே 24ல் காளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 31 முதல் நேற்று வரை (ஜூன் 2) பொங்கல் திருவிழா நடந்தது. கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல்,மாறுவேடப்போட்டி முளைப்பாரி,அக்னிசட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.