Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வளர்பிறை அஷ்டமியில் காலபைரவர் ... மாகாளியம்மன், மாரியம்மன் கோவில் விழா : அம்மனுக்கு திருக்கல்யாணம் மாகாளியம்மன், மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகத்தில் திருச்செந்தூருக்கு சர்ப்ப காவடி கொண்டு வர தடை
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகத்தில் திருச்செந்தூருக்கு சர்ப்ப காவடி கொண்டு வர தடை

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2022
10:06

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி சர்ப்பக் காவடி எடுத்து வர போலீஸ் தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் செந்தில்ராஜ் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். வைகாசி விசாகத்தையொட்டி ஜூன் 11 முதல் 13 வரை மூன்று நாட்கள் சுமார் 5 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயில் வளாகத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், சுகாதாரம், மின்வினியோகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாதயாத்திரை பக்தர்களின் வருகையால் தெப்பக்குளம் மற்றும் ஆவுடையார் குளத்திற்கு போதிய தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டனர். திருச்செந்தூரில் 120 சிறப்பு பஸ்கள் உட்பட 220 பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சர்ப்பக் காவடி எடுத்து வருபவர்கள் பாம்புகளை பக்தர்கள் முன்னிலையில் கடலில் விடுகின்றனர். வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி சர்ப்பக் காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (பிப்.,05) காலை 11 மணிக்கு பிரதமர் மோடி புனித ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பழனி; பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான  நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar