Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரகுன்றம் கோயிலில் நாளை ... மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு மாவூற்று வேலப்பர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
விஸ்வேஸ்வர சுவாமி, வீரராகவப்பெருமாள் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2022
01:06

திருப்பூர்: வைகாசி விசாக தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியான, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, சிவ கண வாத்தியம், வாண வேடிக்கையுடன் விமரிசையாக நடந்தது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி, விமரிசையாக நடந்தது.சோமாஸ்கந்தர், விசாலாட்சியம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்துடன், மலர் அலங்காரம் செய்த வாகனங்களில், 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுத்தனர். அதை தொடர்ந்து, திருவீதியுலா வந்து அருள்பாலித்தனர்.தேர் வீதிகளில், பந்தசேவை, வாண வேடிக்கை மற்றும் சிவனடியார்களின் சிவ கண வாத்திய இசையுடன் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. 63 நாயன்மார்கள் எதிர்சேவை செய்தபடி செல்ல, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர்.ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள், கருட வாகனத்தில், திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் ஏமாற்றம்: பஞ்சமூர்த்தி புறப்பாடு அன்று, எம்பெருமாளுக்கு, பாதம் தாங்கி நடையழகுடன், மலர்ப்பல்லக்கு திருவீதியுலா நடக்குமென, கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இருப்பினும், ஸ்ரீரங்கத்தில் இருந்து, 30 பாதம் தாங்கி நடையழகுகளை வரவழைக்கும் முயற்சி தடைப்பட்டுள்ளது. நேற்றைய, சுவாமி புறப்பாட்டின் போது, சுவாமி வழக்கம் போல் கருடசேவை சாதித்தபடி, திருவீதியுலா சென்றதால், பெருமாள் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar