Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில் ... வயல்பட்டி ராமச்சந்திர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2022
06:06

திருப்போரூர்:நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பின் இன்று, கும்பாபிஷேகம் நடக்கிறது.திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் ஆடி திருவிழா, புரட்டாசி நவராத்திரி விழா, இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும்.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட வருகின்றனர்.இக்கோவிலில் கடைசியாக 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் ராஜகோபுரம் உள்ளிட்ட பல்வேறு சன்னிதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டன.கடந்த 2020ல், கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த, வேண்டவராசி அம்மன் கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, அம்மன் மூலவர் விமானம், உற்சவர் விமானம், ராஜகோபுரம் உள்ளிட்டவற்றுக்கு வண்ணம் தீட்டப்பட்டு, புதுப்பொலிவடைந்தன.கோவில் வளாகத்தில் விநாயகர், முருகர், துர்கை, வெங்கடேச பெருமாள் மற்றும் நவக்கிரஹ சன்னிதிகளுக்கு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இப்பணிகள் முடிந்ததையடுத்து, கோவிலில் இன்று, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகம் முழுதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.கடந்த 14ல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து பூஜை, கோமாதா பூஜை, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 9:00 மணிக்கு, கோபுரம் உட்பட அனைத்து சன்னிதிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.இரவு, இன்னிசை கச்சேரி, திருவீதி உலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை, நெல்லிக்குப்பம் அன்னை வேண்டவராசி சேவா அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று ஹரிதாள கவுரி விரதம். கவுரி விரதம் இருப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவர். இன்று சிவ சக்தியை ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar