Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் ... ஆனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர் ஆனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி கடலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவகுருநாதசுவாமி கோவிலில் முறைகேடு : முதல்வருக்கு தபாலில் மனு
எழுத்தின் அளவு:
சிவகுருநாதசுவாமி கோவிலில் முறைகேடு : முதல்வருக்கு தபாலில் மனு

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2022
04:06

தஞ்சாவூர், கும்பகோணம் அருகே சிவபுரம் சிவகுருநாதசுவாமி கோவலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்க வலியுறுத்தி, அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவினர் முதல்வர், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு தபால் மூலம் மனு அளித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து, தபால் மூலம் அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன்  உள்ளிட்டோர் அனுப்பிய மனுவில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சிவபுரத்தில் சிவகுருநாதசுவாமி கோவிலின் சொத்துகளை  அனுபவித்து வரும் பலரும் வரி செலுத்தாமல் ஏமாற்றி வருகிறார்கள். இக்கோவிலுக்கு 90 லட்சத்திற்கு மேல் நிலுவை பாக்கி உள்ளது. எனவே, அதை வசூல் செய்ய வேண்டும். இக்கோவிலில் நடராஜர் சிலை திருடப்பட்டு மீண்டும் மீட்கப்பட்டு, தற்போது திருவாரூர் சிலை பாதுகாப்பு மையத்தில் எந்த ஒரு பூஜையும் இல்லாமல் உள்ளது. அந்த சிலையை மீண்டும் கோவிலில் வைத்து வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும், சோமஸ்கந்தர் உற்சவர் சிலை மீட்கப்பட்டதாக செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளது.அந்த சிலையையும் மீண்டும் கோவிலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாலயத்தில் கொடிமரம் வைப்பதற்கான கல் துண் இருந்த போதும் இதுவரை கொடிமரம் வைக்காமல் இருக்கிறது. இது வைத்ததற்காக பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தேய்பிறை அஷ்டமி தவிர மற்ற நாட்களில் எந்த ஒரு பூஜையும் சரியாக நடைபெறவில்லை. அர்ச்சனைக்கு அபிஷேகத்திற்கு எந்த ஒரு ரசீதும் கொடுக்கப்படவில்லை. பக்தர்கள் அனைவருக்கும் உரிய ரசீது கொடுத்து ஆலயத்தை வளர்ச்சி அடைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar