Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாணிக்கவாசக சுவாமிகள் குரு பூஜை விழா ஏழு கோயில்களில் பாலாலயம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூலாம்பாடி திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2022
04:07

பெரம்பலுார்: பூலாம்பாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரபுவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக நடக்கிறது.

பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த நுாறாண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.  இந்நிலையில், கோவில்கள் சிதிலமடைந்ததால் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலை சீரமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி கிராமத்தைச் சேர்ந்த மலேசிய தொழிலதிபரான  டத்தோ பிரகதீஷ் குமார் உதவியுடன் திரவதி அம்மன் கோவில் ராஜகோபுரம், செல்வ விநாயகர் கோயில், தர்மராஜா சுவாமி கோவில், அரவான் சுவாமி கோவில், போத்த ராஜா சுவாமி கோவில், கிருஷ்ணர்  கோவில் பலிபீடம் மற்றும் கொடி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைபாடுகளுடன் கோவில் திருப்பணிகள் நடந்தது.

திருப்பணிகள் நிறைவு பெற்றது. நேற்று இளம் காளியம்மன் சக்தி அளிக்கும் இடத்திலிருந்து 126 தீர்த்த குடங்கள் மற்றும் 251 முளைப்பாரிகளை பக்தர்கள் எடுத்துக்கொண்டு மங்கள இசை உடன்  யாகசாலைக்கு வந்தனர். இதை தொடர்ந்து யாக சாலை பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடக்கிறது. ஆறாம் தேதி அதிகாலை நாலாம் கால பூஜை நடைபெறுகிறது.  விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை காலை 6 45 முதல் 725 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை வழங்க நடைபெற உள்ளது. தொடர்ந்து சுவாமிகளுக்கு  தீபாரதனை நடக்கிறது. மேலும் கும்பாபிஷேக விழாவை ஒட்டி பகுதியில் ஆறு இடங்களில் அன்னதானம் நடக்கிறது. விநாயகர் யாகசாலை தொழிலதிபர் பிரகதீஷ் குமார் மற்றும் கிராம மக்கள் செய்து  வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar