உத்திரிய மாதா சப்பர பவனி பல்லாயிரக்கணக்கான மும்பை பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2022 04:07
நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணியில் நடைப்பெற்ற உத்திரிய மாதா சப்பர பவனியில்,20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மும்பை பகதர்கள பங்கேற்றனர்.
நாகை அடுத்த வேளாங்கண்ணியில் கீழ் திசை நாடுகளின் லூர்து என்றழைக்கப்படும் ஆரோக்கியமாதா தேவாலயத்தின் முன்புறம் அமைந் துள்ளது உத்திரிய மாதா தேவாலயம். இத் தேவாலய ஆண்டுத் திருவிழாவில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வசாப் கிறிஸ்தவ மீனவர்கள், வேளாங்கண்ணியில் 10 நாட்கள் தங்கி பங்கேற்பது வழக்கம். இவ்வாண்டு திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்நத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று இரவு சப்பரப்பவனி வெகு விமரிசையாக நடைப்பெற்றது. முன்னதாக தேவாலயத்திலிருந்து சப்பரத்திற்கு உத்திரியமாதா எழுந்தருளினார். தேவாலய பங்கு பாதிரியார் அற்புதராஜ், புனிதம் செய்து சப்பர பவனியை துவக்கி வைத்தார். உத்திரிய மாதா சப்பரத்தினை,மும்பை வசாப் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து சென்றனர்.. முக்கிய வீதிகள் வழியாக சப்பரப் பவனி சென்றபோது, வீதிகளின் இருபுறமும் நின்றிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மும்பை பக்தர்கள், உத்திரிய மாதா, அந்தோணியார், செபஸ்தியார் சப்பரங்களின் மீது மலர் தூவி நேர்த்திக் கடனை செலுத்தினர். சப்பரம் நிலைக்கு வந்ததும் வசாப் கிறிஸ்தவ மீனவர்கள், பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.