Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ... காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழா காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
10:07

காஞ்சிபுரம் : ஆடி மாத பிறப்பான முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்தது.ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால், ஆடி பிறந்தது முதல், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில், அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, ஆடி முதல் ஞாயிறான நேற்று காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெருவில் உள்ள பரஞ்சோதி அம்மனுக்கு, ஆடித்திருவிழா நடந்தது.அதிகாலை 5:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்கியது. காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது. 11:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.

இதில், அலங்கரிக்கப்பபட்ட பரஞ்சோதி அம்மன் நகரீஸ்வரர் கோவில் தெரு, வைகுண்ட பெருமாள் கோவில் விரிவாக்கம் உள்ளிட்ட பகுதியில் வீதியுலா சென்றது.பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இரவு 9:00 மணிக்கு அம்மன் வர்ணித்து கும்பம் படையலிடப்பட்டது.இதேபோல் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள தாய் படவேட்டம்மன் கோவிலில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மன் பல்வேறு வீதிகள் வழியாக உலா வந்தார். பகல் 12:00 மணிக்கு கூழ்வார்க்கப்பட்டது. காஞ்சிபுரம் வெள்ளக் குளம் சந்தைவெளி அம்மன் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar