Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ... ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அழகு நாச்சியம்மன் தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆங்கிலேயர் வழங்கிய புடவையில் அழகு நாச்சியம்மன் தரிசனம்

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2022
05:07

பல்லடம்: பல்லடம் அருகே, ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தி, அழகு நாச்சி அம்மனை பக்தர்கள் தரிசித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வதம்பச்சேரி ஊராட்சி நல்லூர்பாளையத்தில், அழகு நாச்சியம்மன் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா, ஆண்டு விழா உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தியபடி பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வருவது இக்கோவிலின் சிறப்பம்சம்.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், பல நூறு ஆண்டுக்கு முன், நல்லூர்பாளையம் கிராமம் வழியாக சென்ற ஆங்கிலேயர் படை, இங்குள்ள பெண்கள் சிலரிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த பெண்கள், இங்குள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தனர். பெண்களை விரட்டி வந்த ஆங்கிலேயர்களுக்கு கண் பார்வை கோளாறு ஏற்பட்டது. தவறை உணர்ந்த அவர்களிடம், அம்மனை வேண்டிக் கொண்டால் நிச்சயம் சரியாகும் என ஊர் மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதன்படியே, அவர்களுக்கு கண் பார்வை சரியானது. இதையடுத்து, அழகு நாச்சி அம்மனுக்கு பட்டு, மற்றும் கதர் சேலைகள் வழங்கி அம்மனை வழிபட்டுச் சென்றதாக வரலாறுகள் கூறுகிறது. அழகு நாச்சி அம்மன் எனும் பெயர் கொண்ட இந்த அம்மன், பெண்களுக்கு அடைக்கலம் அளித்ததால் அன்று முதல் அடைக்கல அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இது நடந்தது ஒரு ஆடி மாதம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயர் வழங்கிய புடவையை உடுத்தி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆடி மாதம் வழிபாடு முடிந்ததும் புடவை பத்திரப்படுத்தி வைக்கப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை அஷ்டமியை முன்னிட்டுகால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, கோவை அருகே கேரள ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள உடையவர் சன்னிதி, தமிழக அரசின், 2023 – -24ம் ஆண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar