ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2022 11:08
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது.ஆடித் திருக்கல்யாண விழா ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாண விழாவையொட்டி கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரித்த மணமேடையில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர்.பின், கோயில் குருக்கள் வேத மந்திரம் முழங்க இரவு 7:55 மணிக்கு அம்மனுக்கு திருமாங்கல்யம் சூட்டப்பட்டு ஆடி திருக்கல்யாணம் விழா விமரிசையாக நடந்தது.இதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.தக்கார் பழனிக்குமார், துணை ஆணையர் மாரியப்பன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஸ்கார் கமலநாதன், யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன், ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடம் மேலாளர் ஆடிட்டர்சுந்தரம், நிர்வாகி சாச்சா, அக்னி தீர்த்தம் புரோகிதர்கள் நலச்சங்க தலைவர் ராமசுப்பிரமணியன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.