Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளியில் வரலட்சுமி விரதம்: கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. பெண்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளியில் வரலட்சுமி விரதம்: கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. பெண்கள் பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2022
11:08

மதுரை: ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில், கோலாகல திருவிழா நடக்கும். இன்று ஆடி வெள்ளியில், வரலட்சுமி விரதமும் சேர்ந்து வருவதால், பெண்கள் பக்தி பரவசத்துடன் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை கோயில்களில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு, முந்தைய வெள்ளிக்கிழமையில், வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இன்று ஆடி வெள்ளியில், வரலட்சுமி விரதம் அமைகிறது. ஏற்கனவே, ஆடி  மாதத்தை ஒட்டி, அம்மன் கோவில்களில், உற்சவங்கள் களைகட்டியுள்ளன. பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.  இன்று, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுவதால், ஏராளமான பெண்கள் அதிகாலை முதல் கோயில்களில் வழிபாடு செய்துவருகின்றனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள்.  இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவ ருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக்  கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும்  விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar