சிவலிங்கம், குழலூதும் கிருஷ்ணர் படங்களை வீட்டில் வழிபடக்கூடாதாமே ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2012 05:08
யார் சொன்னது? சொன்னவரிடம் காரணம் கேட்கவில்லையா? சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்வதற்கும், குழலூதும் கிருஷ்ணரை வழிபடுவதற்கும் பலபிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். நீங்கள் புண்ணியம் செய்திருப்பதால் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். செய்யக்கூடாது என்று சொன்னவர் கடுகளவு புண்ணியம் கூட செய்தவராகத் தெரியவில்லை.